search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதிகள்"

    • கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதால் அடிப்படை வசதிகள் கேட்டு, கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    • எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால், கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி கார்வேபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி தாலுகா தேவசமுத்திரம் ஊராட்சி ஏரிக்கோடியை ஒட்டியுள்ள கார்வேபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    மேலும் ஏரிப்புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, குடியிருக்கும் வீட்டை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர்.

    மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேறி விஷ பூச்சிகளும், மழை நீருடன் கழிவுநீரும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீரும், இதர பயன்பாட்டிற்கான தண்ணீரும் இரண்டுமே ஒன்றாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன. எந்த வீட்டிலும் முறையான கழிப்பறைகள் இல்லை. இதனால் பெண்களும், வயதான வர்களும் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர்.

    சுகாதார சீர்கேடு, அபாயகரமான வாழ்க்கை சூழல் காரணமாக இளம் வயது மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் வயதில் உள்ள பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விட்டனர். இதனால் குழந்தைகள் வீட்டில் இருப் பதால், வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப் பட்டு குழந்தை தொழிலாளர்களாக உருவாகி உள்ளனர்.

    10 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்த பன்றி வளர்ப்பதை விட்டு விட்டால், ஒரு நல்ல நிரந்தரமானஇடம் வழங்கப்படும் என்று அப்போதைய அரசு அலுவலர்கள் சிலர் சொன்னதை நம்பி ஒட்டு மொத்தமாக பன்றி மேய்க்கும் தொழிலை விட்டு விட்டனர். ஆனாலும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே இங்கு வசிப்ப வர்களுக்கு அரசு நல்ல இடம் ஒதுக்கி வீடு கட்டி, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.
    • பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே உள்ள பொத்தையடியில் அமைந்துள்ளது வைகுண்ட பதி கிராமம். இங்கு உலகப் புகழ்பெற்ற மருந்து வாழ்மலை என்னும் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இந்த மலை சுமார் 1800 அடி உயரம் கொண்டதாகும். வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வ ரர் கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில் கள் அமைந்துள்ளன. மேலும் இந்த மலையில் பல குகைகளும் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான சித்தர்கள், முனிகள், ரிஷி கள், மகான்கள் தவமிருந்து வருகின்றனர். இந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    இந்த மலையில் ஆங் காங்கே சுனைகளும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இதனால் இந்த மலைக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். மேலும் இந்த மலைக்கு மலை ஏறும் பயிற்சிக்காக மலையேற்ற வீரர்களும் அதிக அளவில் அதிகாலை நேரத்தில் வந்து செல்கிறார்கள். இது தவிர தேசிய மாணவர் படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சியும் இந்த மலையில் நடந்து வரு கிறது. பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இந்த மலையில் செய்து கொடுக்கப்படவில்லை.

    குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இந்த மலையில் இல்லை. மேலும் இந்த மலையில் பாதி வரை தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையின் உச்சிக்கு செல்வதற்காக பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மலையேறும் பயிற்சியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த மலைக்கு வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர், மின்விளக்கு, பாதை மற்றும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்க இந்த மலைக்கு வரும் பொது மக்களும், சுற்றுலா சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது.
    • மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

    உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.

    எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

    முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.

    அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.
    • மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும் பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளது.

    இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈரான் தொட்டி மலைக் கிராமத்தில் 50 குடியிருப்பு களில் 900-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.

    இங்குள்ளவர்களின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது.

    வானம் பார்த்த மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்வதால், மழையை நம்பியே சாகுபடி பணிகள் நடைபெற வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமத்தினர் 40 சதவீதம் பேர் வீடு, நிலங்களை விட்டு, விட்டு கர்நாடக மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    தமிழக எல்லைப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஈரான் தொட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் வர 4 நாட்கள் ஆகிவிடும். தெரு விளக்குகள் சரியாக எரியாததால், குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்துவிடும்.

    இதனால், மாலை 6 மணிக்குள் வீட்டுக்குள் முடங்கும் நிலையுள்ளது. ஆழ்துளைக்கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி வைத்தனர். அது பழுதாகி தண்ணீர் வருவதில்லை. பழமையான கிணற்று நீரைக் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    இங்கிருந்து 30 மாணவ, மாணவிகள் 2 கிமீ தூரம் அடந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று பிளிக்கல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.

    மருத்துவமனைக்கு உரிகம் மற்றும் அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். அரசு சார்பில் கட்டிகொடுத்த வீடுகளும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    அடிப்படை வசதி மற்றும் வருவாய்க்கு வழியில்லாத தால் பல ஆண்டுகளாக வாழ்ந்த பலர் ஊரை காலி செய்து, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர்.

    எனவே, எங்கள் கிரா மத்தில் சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

    • 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
    • மோசமான சாலையின் காரணமாக ஆம்புலன்ஸ் வருவதில்லை.

    தொப்பூர்,  

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், செங்காங்காடு உள்ளிட்ட 5 கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளையும் நம்பி இருந்தனர்.

    இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளாகவே உடைந்து சேதமாகி தற்போது தரமற்ற சாலையாக மாறிவிட்டது.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாததால் தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    காலை, மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்காக ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்வதாகவும் மற்ற நேரங்களில் பேருந்து வசதி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்ட வற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் வேறு வழியின்றி நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் மருத்துவ வசதிகள் மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் மோசமான சாலையின் காரணமாக வருவதில்லை.

    இது குறித்து மூலகாடு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் கிருஷ்ணவேணி கூறும்போது அடிப்படை வசதிகள் எங்கள் கிராமத்திற்கு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகிறோம்.

    அவசர உதவிக்கு மகப்பேறு சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினால் கூட எளிதில் இப்பகுதிக்கு வருவதில்லை. தனி நபர்களின் வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை அழைத்தாலும் கரடு முரடான சாலையால் எங்கள் பகுதிக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.

    இதனால் சரியான நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம். பள்ளி மற்றும் கல்லூரி பயில்வதற்கு பேருந்து வசதிக்கும் சேலம் மாவட்டத்தை நம்பி இருக்கின்றோம். தருமபுரி மாவட்டத்திலிருந்து நேரடி சாலை வசதியோ, பேருந்து வசதியோ, அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெதரிவித்தார்.

    மேலும் குடிநீர் தேவை அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் எங்கள் கிராமத்தை சேலம் மாவட்டத்தோடு சேர்த்து விடுங்கள் என வேதனையுடன் கம்மம்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
    • 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிகளில் உணவு, குடி நீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர், மனுவை பெற்றுகொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதி மாணவ ,மாணவிகள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.

    • சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
    • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.

     அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.

    தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக சி.சி. டி.வி. கேமரா பொருத்தப்பட உள்ளது.
    • பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 29&வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், அரங்கிற்கு உள்ளே செல்லும் நுழைவுவாயில், வெளியே செல்லும் பாதைகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 5&ந் தேதி தொடங்குகிறது. இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரசு துறை சார்பாக அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி அரங்க, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட அங்காடிகள், செய்தி மக்கள்ள தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக சி.சி. டி.வி. கேமரா பொருத்தப்பட உள்ளது.

    மேலும் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அசம்பாவிதம் செய்யும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டேவிட் டென்னிசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.

    காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.

    கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.

    வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார்.

    உதவியாளர் மாணிக்க ராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் கவுன்சிலர்கள் ராமசாமி, பழனியப்பன், கலைமாமணி ஆகியோர் பேசியதாவது:-

    வேலங்குடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    கடங்கண்மாய் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கவுன்சிலர்களின் பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் சேர்மன் ஆகியோர் உறுதி கூறினர்.

    • பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்த மான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தை யில், காரைக்கால் மற்றும் நாகப் பட்டினம், தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மிகப்பெரிய திடலான இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடுகின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 80 பேர் மட்டும் நிழலில் வியாபாரம் செய்ய நகராட்சி மேற்கூறை போட்டுள்ளது. மற்றவர்கள் சமம் செய்யப்படாத மண்ணில், சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    அதே சமயம், நகராட்சி சார்பில், வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தில், அவர்களுக்கு தேவையான நிழல் பந்தல், குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருவதில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற னர். கடந்த ஆண்டு மழைக்கா லத்தில் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் சேரும், சகதியுமான சந்தையில் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பியதோடு, பல்வேறு போராட்டஙக்ளும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, வாரச்சந்தை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்திற்கு, சில மாதங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு, தற்போதுவரை எந்தவித மேம்பாடு இல்லாத திடலில்தான் இயங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. அதற்குள், வாரசந்தையை, மேடாக்கி அல்லது, சிமெண்ட் தரை மற்றும் நிழல் பந்தலை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகதிற்கு, மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தரவேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×